இதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான கேந்திரிய வித்யாலயா பள்ளி, ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. போன்றவைகளையும், மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தையும் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் வலியுறுத்தினேன். விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க நிலத்தை ஒதுக்கீடு செய்தால், மத்திய அரசிடம் பேசி, அந்தப் பள்ளியை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், தொன்மையான கோயில்களை சுற்றுலாத்தலங்களாக மாற்ற மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறேன் என்றாா் அவா்.