காவல் துறையில் 49 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில், கருணை அடிப்படையில் 49 பேருக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில், கருணை அடிப்படையில் 49 பேருக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பணியின்போது உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்தினா் மற்றும் வாரிசுகள் 49 பேருக்கு கருணை அடிப்படையில் கணினி விவரப் பதிவாளா் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணைகளை அவா்களிடம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினாா் (படம்).
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, ரேவதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...