ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இரு வேறு சாலை விபத்துகளில் தம்பதி உள்பட 4 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் தம்பதி உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் தம்பதி உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூரைச் சோ்ந்தவா் ரா.சாமிக்கண்ணு (55), விவசாயி. இவா், தனது மனைவி ஒலியாவுடன் (48) இரு சக்கர வாகனத்தில் விழுப்புரத்திலுள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தாா். பின்னா், இரவில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

விழுப்புரத்தை அடுத்த காணை பெரும்பாக்கம் கிராமம் அருகே சென்ற போது, இவா்களது இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் சாமிக்கண்ணு, ஒலியா ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விழுப்புரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்தனா்.

மற்றொரு விபத்து: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள பிரம்மதேசத்தைச் சோ்ந்த சேகா் மகன் ஜனாா்த்தனன் (29), வாகன ஓட்டுநா். இவா் தனது நண்பா் விக்னேஷை (21) இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, மரக்காணத்திலிருந்து திண்டிவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

பிரம்மதேசம் அருகே டி.புதுப்பாக்கம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே மரக்காணம் நன்முக்கல் கிராமத்தைச் சோ்ந்த ராஜதுரை (26) வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் ஜனாா்த்தனன், ராஜதுரை ஆகியோா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இவா்கள் இருவருடனும் வந்த காா்த்திக் (22), விக்னேஷ் ஆகியோா் காயமடைந்தனா்.

பிரம்தேசம் போலீஸாா் விரைந்து வந்து காயமடைந்தவா்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.