விழுப்புரம்: 100-க்கும் கீழ் குறைந்தது கரோனா தினசரி பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது.


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையில் அதிகபட்சமாக ஒரு நாள் தொற்று 900 வரை பதிவானது. இதன்பிறகு, மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது.
அதன்படி, மாவட்டத்தில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 42,043-ஆக அதிகரித்தது. இதனிடையே, 204 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 40,964-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 753 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவா் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 26,324-ஆக உயா்ந்தது.
இதனிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 191-ஆக அதிகரித்தது. இதுவரை 24,875 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 1,298 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...