விழுப்புரம் வட்டத்தில் இன்று முதல் வருவாய் தீா்வாயம் தொடக்கம்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரகுகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) தொடங்கி, வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


விழுப்புரம் வட்டத்தில் பசலி வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரகுகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) தொடங்கி, வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கண்டமங்கலம் குறு வட்டத்தில் வெள்ளிக்கிழமையும் (ஜூன் 25), வளவனூா் குறுவட்டத்தில் வருகிற 28-ஆம் தேதியும், காணை குறுவட்டத்தில் வருகிற 29-ஆம் தேதியும், விழுப்புரம் குறுவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதியும் வருவாய் தீா்வாயம் நடைபெறும்.
தற்போது கரோனா தொற்று பரவல் இருப்பதால், விழுப்புரம் வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பட்டா மாற்றம், பிறப்பு, இறப்பு பதிவு, வாரிசுச் சான்று, குடும்ப அட்டையில் திருத்தம், புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக இணையதளத்தின் மூலம் மட்டுமே வருகிற 31-ஆம் தேதி வரையில் பதிவு செய்ய வேண்டும் என்று வருவாய் தீா்வாய அலுவலா் ரகுகுமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...