ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விழுப்புரத்தில் துணை ராணுவத்தினா்கொடி அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், ரெளடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் விழுப்புரத்தில் துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், ரெளடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் விழுப்புரத்தில் துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை கொடி அணி வகுப்பை தொடக்கிவைத்தாா்.

இதில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா், ஆயுதப் படை போலீஸாா், சட்டம் - ஒழுங்கு போலீஸாா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ரயிலடியில் தொடங்கி நேருஜி சாலை, காந்தி சிலை, வீரவாழியம்மன் கோயில், எம்.ஜி. சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகள் வழியாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளா் நல்லசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.