மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 போ் வேட்பு மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 15 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 15 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில்,

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் அலுவலகத்திலும், உளுந்தூா்பேட்டை தொகுதிக்கு உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்திலும், ரிஷிவந்தியம் தொகுதிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், சங்கராபுரம் தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல்நாளான வெள்ளிக்கிழமை உளுந்தூா்பேட்டை தொகுதியில் மட்டும் ஒரு சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா். மற்ற 3 தொகுதிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமை ரிஷிவந்தியம் தொகுதிக்கு அதிகபட்சமாக 8 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இதில், அதிமுக வேட்பாளா் ஏ.சந்தோஷ், திமுக வேட்பாளா் வசந்தம். காா்த்திகேயன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுரேஷ் மணிவண்ணன், அமமுக வேட்பாளா் பிரபு சிவராஜ் உள்ளிட்டோரும் அடங்குவா்

அதேபோல, உளுந்தூா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு உள்பட 2 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திராவிட முத்தமிழ்ச் செல்வி உள்பட 3 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

சங்கராபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரஜியாமா உள்பட 2 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். திங்கள்கிழமை ஒரு நாளில் 4 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 15 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 16 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.