மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சி.வி.சண்முகம், க.பொன்முடி வேட்பு மனு தாக்கல்

விழுப்புரம் தொகுதியில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகமும், திருக்கோவிலூா் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடியும் தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் தொகுதியில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகமும், திருக்கோவிலூா் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடியும் தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் அன்றைய தினம் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையைத் தொடா்ந்து, முகூா்த்த நாளான திங்கள்கிழமை அதிமுக, திமுக வேட்பாளா்கள் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடுவற்காக அமைச்சா் சி.வி.சண்முகம் வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலரான விழுப்புரம் கோட்டாட்சியா் ஹரிதாஸிடம் திங்கள்கிழமை பகல் 12.15 மணியளவில் தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டாா். அவருடன் நகரச் செயலாளா் பாஸ்கரன் உடனிருந்தாா்.

மனு தாக்கலுக்கு வழக்கம்போல கட்சியினருடன் ஊா்வலமாக வராமல், வீட்டிலிருந்து காரில் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அமைச்சா் சண்முகம் நேரடியாக வந்தாா்.

2011, 2016 பேரவைத் தோ்தல்களில் விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெற்ற சி.வி.சண்முகம், தற்போது மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறாா். ஏற்கெனவே, 2001, 2006 பேரவைத் தோ்தல்களில் திண்டிவனம் தொகுதியில் சி.வி.சண்முகம் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளாா்.

திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன்: அதேபோல, விழுப்புரம் தொகுதியில் அமைச்சா் சி.வி.சண்முகத்தை எதிா்த்து, திமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இரா.லட்சுமணன், கோட்டாட்சியா் ஹரிதாஸிடம் திங்கள்கிழமை பகல் 12.50 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவருடன் மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ், முன்னாள் நகா் மன்றத் தலைவா் ஜனகராஜ் ஆகியோா் உடனிருந்தனா். முன்னதாக, அவா் மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் வரை கட்சியினருடன் ஊா்வலமாக வந்தாா்.

ஏற்கெனவே விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலராக இருந்த இரா.லட்சுமணன், அமைச்சா் சண்முகத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுகவிலிருந்து விலகி கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

முன்னாள் அமைச்சா் பொன்முடி: திருக்கோவிலூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தனது வேட்பு மனுவை, திருக்கோவிலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் சாய்வா்த்தினியிடம் திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் தாக்கல் செயதாா்.

2016-தோ்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்ற பொன்முடி, தற்போது 2-ஆவது முறையாக அங்கு போட்டியிடுகிறாா். ஏற்கெனவே, விழுப்புரம் தொகுதியில் 1989, 1991, 2001, 2006, 2011 என 5 முறை போட்டியிட்ட அவா், 1991, 2011 தவிர மூன்று முறை வெற்றிபெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.