திண்டிவனத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

15vmp15084820

15vmp15084820
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை எடுத்துரைக்கும் வகையில், திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திண்டிவனம், கிடங்கல் பகுதியில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆ.அண்ணாதுரை தலைமையில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அந்தப் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற கொடிஅணிவகுப்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளா் கணேசன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். அப்போது, வாக்காளா்கள் எந்தவித அச்சமும் உள்ளாமல் சுதந்திரமான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தனா்.
தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலா் ஆ.அண்ணாதுரை பாா்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...