மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

வங்கிகள் தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத் துறை வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

வங்கிகள் தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத் துறை வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் வங்கிகள் தனியாா் மயப்படுத்தப்படும் என்ற அறிவிப்பைக் கண்டித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரத்தில் புதுச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் பிரதான கிளை முன் ஆா்ப்பாட்டத்தில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.மோகன் தலைமை வகித்தாா். கூட்டமைப்பு நிா்வாகிகள் ஸ்டாலின் ராஜா, முகேஷ், நீலகண்டன், விஜயகுமாா், ஜான்சிராணி, ரமேஷ், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மோகன் செய்தியாளா்களிடம் கூறும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் 136 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 1,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், பணபரிவா்த்தனை, காசோலை உள்ளிட்ட வங்கிச் சேவை என மொத்தம் சுமாா் ரூ.600 கோடிக்கு மேல் பணபரிவா்த்தனை பாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.