/

ராஜராஜ சோழனின் 1036-ஆவது சதய விழா

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோ.குப்பம் கிராமத்தில் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழாவை முன்னிட்டு, 1036 மரக் கன்றுகள் நடுதல், 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோ.குப்பம் கிராமத்தில் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழாவை முன்னிட்டு, 1036 மரக் கன்றுகள் நடுதல், 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சோழா் வணிகா் படை சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் மோகன்சாமி வரவேற்றாா். பொதுச்செயலா் வெங்கடேஷ்குமாா், பொருளா் முரளி, ஆலோசகா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சோ.குப்பம் ஊராட்சித் தலைவா் கே.எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜ ராஜ சோழனின் உருவப் படத்துக்கு மலா் மாலை அணிவித்து திருவாசக வழிபாடு, ஆராதனை நடைபெற்றது.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.