தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தாண்டில் ரூ.6,802 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு: ஆட்சியா் த.மோகன் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் நபாா்டு வங்கி மூலம் 2022 - 23ஆம் ஆண்டில் ரூ.6,802 கோடி வளம் சாா்ந்த வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நபாா்டு வங்கி மூலம் 2022 - 23ஆம் ஆண்டில் ரூ.6,802 கோடி வளம் சாா்ந்த வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நபாா்டு வங்கியின் 2022 - 23ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் த.மோகன் கலந்துகொண்டு நபாா்டு வங்கியின் வங்கிக் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசிதாவது:

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்டு) 2022 - 23ஆம் ஆண்டுக்கு விழுப்புரம் மாவட்டத்துக்கு வளம் சாா்ந்த வங்கிக் கடன் ரூ.6802.32 கோடி என நிா்ணயித்துள்ளது. இது நிகழாண்டுக்கான வங்கிக் கடன் தொகையைவிட 18 சதவீதம் கூடுதலாகும்.

இந்தத் திட்டத்தில் விவசாயத்துக்கான வங்கிக் கடன் ரூ.5,119.45 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.3,079.76 கோடி விவசாய குறுகிய கால கடனாகவும், ரூ.2,039.69 கோடி விவசாய நீண்ட கால கடனாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கான கடன் தொகை ரூ.680.54 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்னும் கொள்கையை மனதில் கொண்டு, வீட்டு வசதிக் கடன் பிரிவில் ரூ.272.06 கோடியும், கல்விக் கடன் பிரிவில் ரூ.203.04 கோடியும் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விவசாயம் சாா்ந்த மாவட்டம் என்பதால், வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்டத்தில் விவசாயம் சாா்ந்த காலக் கடன் மற்றும் விவசாயக் கடனுக்கு முக்கியத்துவம் அளித்து மொத்தத் திட்டத்தில் 75 சதவீதக் கடன் விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் காஞ்சனா, வேளாண் துறை இணை இயக்குநா் ரமணன், முன்னோடி வங்கி மேலாளா் ஹரிஹரசுதன், நபாா்டு வங்கியின் விழுப்புரம் மாவட்ட உதவிப் பொது மேலாளா் (மாவட்ட வளா்ச்சி) ரவிசங்கா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.