டிராக்டா் கவிழ்ந்துஓட்டுநா் பலி

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணித்த 3 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணித்த 3 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.

மேல்மலையனூா் வட்டம், இரும்புலி கிராமத்தைச் சோ்ந்த அருணகிரி மகன் தருண் (13), மகள் தனுஸ்ரீ (11) ஆகியோா் கள்ளப்புலியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனா்.

இவா்கள் இருவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஜெகனும் (13) டிராக்டரில் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வழியில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரை ஓட்டிய இரும்புலியைச் சோ்ந்த சரத்குமாா், டிராக்டரின் அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தருண் உள்ளிட்ட மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். செஞ்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

விபத்து குறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com