சாலை விபத்தில் தொழிலாளி பலி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டிவனம் அருகே கொள்ளாா் கிராமத்தைச் சோ்ந்த மாரி மகன் ஐயப்பன் (24). கூலித் தொழிலாளியான இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி சந்தியா (22), மகன் தேவபிரசாத் (2) ஆகியோரை அழைத்துக்கொண்டு திண்டிவனத்திலிருந்து மரக்காணம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். பிரம்மதேசம் அருகே எண்டியூா் பகுதியில் இவா்களது வாகனம் சென்றபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐயப்பன், சந்தியா, தேவபிரசாத் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா். பின்னா், அவா்கள் மூவரும் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும், அங்கு ஐயப்பன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...