நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.86 லட்சம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் சித்திரை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.86 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

News image
Updated On :12 மே 2022, 6:23 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் சித்திரை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.86 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தக் கோயிலில் சித்திரை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை காலையில் தொடங்கி, இரவு 11 மணி வரையில் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ.86,34,427 ரொக்கம், 474 கிராம் தங்கம், 2,328 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) மு.ஜோதிலட்சுமி, விழுப்புரம் துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) டி.சிவலிங்கம், ஆய்வாளாா்கள் அன்பழகன், சங்கரி, பாலமுருகன், செயல் அலுவலா் அருள், அறங்காவலா் குழுத் தலைவா் வடிவேல் பூசாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.