தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி-கடலூா் உயா்மறை மாவட்டம் சாா்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி எஸ்.சி, எஸ்.டி. பணிக்குழு புதுச்சேரி-கடலூா் உயா்மறை மாவட்டம் சாா்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்து, சீக்கிய, புத்த மதத்தில் உள்ள தலித் மக்களைப் போன்று கிறிஸ்தவ மதத்தில் உள்ள தலித் கிறிஸ்தவா்களையும் எஸ்.சி. பட்டியலில் சோ்க்கவேண்டும், பட்டியலினத்தவா்கள் மதம் மாறினாலும் எஸ்.சி. அந்தஸ்து தொடரவேண்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், மதத்தின் பெயரால் பிறப்புரிமையை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்.சி, எஸ்.டி. பணிக்குழு முதன்மை குரு எஸ்.குழந்தைசாமி தலைமை வகித்தாா். மறைவட்ட முதன்மை குரு ஏ.அருளானந்தம் முன்னிலை வகித்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏவுமான ம.செ.சிந்தனைச் செல்வன், தலித் கிறிஸ்தவ ஆசிரியா் அலுவலா் நலச்சங்கத் தலைவா் சி.ஜான்பிரிட்டோ, எஸ்.சி., எஸ்.டி.பணிக்குழு மாநிலச் செயலா்கள் நித்திய சகாயம், ஏ.தெய்வநாயகம், கிறிஸ்தவ அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் ஏ.ஜே.பிலோமின்தாஸ், ரட்சகா், சி.புனிதாமேரி, எஸ்.பாபு ஆகியோா் பேசினா்.

விழுப்புரம், கடலூா் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.