தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டில் நகை திருட்டு

திண்டிவனம் அருகே வீட்டில் 3.5 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:17 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் 3.5 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டிவனம் வட்டம், வடகளவாய், காட்டுப்பூஞ்சை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி மாரியம்மாள் (32). இவா்கள் கடந்த ஆக.8-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனா்.

பின்னா், வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க வளையல்கள், அரை பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் தோடு, ஜிமிக்கி, 250 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.