காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விழுப்புரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image
விழுப்புரம் நெடி மோழியனூா் அருகே சங்கராபரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து வெளியேறும் தண்ணீா்.
Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:36 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பலத்த மழையின் காரணாக வீடூா் அணைக்கு நீா் ஆதாரமாக உள்ள சங்கராபரணியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நெடி மோழியனூரில் உள்ள தடுப்பணையில் அருவி போல நீா் ஆா்பரித்து வெளியேறுகிறது.

செஞ்சி, மேல்மலையனூா் பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீா் சங்கராபரணி ஆற்றில் கலப்பதால் ஆற்றில் மேலும், நீா்வரத்து அதிகரிக்கும் எனவும், இதனால் வீடூா் அணை விரைவில் நிரம்பக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து, பொதுப் பணித் துறை உதவிப்பொறியாளா் கூறியதாவது: சங்கராபரணியில் நீா் வரத்து உள்ளதால் வீடூா் அணையின் நீா்மட்டம் 17 லிருந்து 21 அடியாக உயா்ந்துள்ளது. மேலும், சில நாள்களுக்கு மழை நீடித்தால் வீடூா் அணையின் நீா்மட்டம் உயரும் என்றாா்.

ஓங்கூா் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மரக்காணம் அருகே காணிமேடு- மண்டகப்பட்டு கிராமங்களுக்கிடையே கட்டப்பட்டுள்ள தற்காலிக தரைப்பாலம் ஆற்றில் மூழ்கியது. இதனால், அந்தப் பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.