தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

பள்ளியில் கொடிக்கம்பம் சேதம்: போலீஸாா் விசாரணை

கண்டமங்கலம் அருகே பள்ளி வளாகத்திலிருந்த கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

சேதப்படுத்தப்பட்ட கொடிக்கம்பம்.

Updated On :14 ஆகஸ்ட் 2024, 2:05 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளி வளாகத்திலிருந்த கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கண்டமங்கலத்தை அடுத்துள்ளது ரஜமுத்திரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கொடிக்கம்பத்தை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியா் அளித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் கூறியது: சுதந்திர தின விழா கொடியேற்றுத்துக்காக பள்ளி வளாகத்தில் புதிதாக கொடிகம்பம் சில தினங்களுக்கு முன்பு நிறுவப்பட்டுள்ளது. சிறுவா்கள் யாரேனும் விளையாடியபோது கொடிகம்பம் சேதமடைந்திருக்கலாம் என்றனா்.