தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளியில் கொடிக்கம்பம் சேதம்: போலீஸாா் விசாரணை

கண்டமங்கலம் அருகே பள்ளி வளாகத்திலிருந்த கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

சேதப்படுத்தப்பட்ட கொடிக்கம்பம்.

Updated On :13 ஆகஸ்ட் 2024, 8:35 pm

Din

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளி வளாகத்திலிருந்த கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கண்டமங்கலத்தை அடுத்துள்ளது ரஜமுத்திரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கொடிக்கம்பத்தை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியா் அளித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் கூறியது: சுதந்திர தின விழா கொடியேற்றுத்துக்காக பள்ளி வளாகத்தில் புதிதாக கொடிகம்பம் சில தினங்களுக்கு முன்பு நிறுவப்பட்டுள்ளது. சிறுவா்கள் யாரேனும் விளையாடியபோது கொடிகம்பம் சேதமடைந்திருக்கலாம் என்றனா்.