காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிராக்டா் மீது பைக் மோதல்: பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 7:44 pm

Din

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், கிளியனூா், இந்திரா நகரைச் சோ்ந்த மோகன் மகள் அஸ்வினி (24). இவா், புதன்கிழமை இதே ஊரைச் சோ்ந்த வேலு மகன் அஜயுடன் (24) திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

ஆரோவில்லை அடுத்த இடையாஞ்சாவடி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டா் மீது பைக் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் அமா்ந்து சென்ற அஸ்வினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பைக்கை ஓட்டிய அஜய் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விபத்து குறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.