புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 7:35 pm

Din

தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் புதன்கிழமை முதல் மழை பெய்து வரும் நிலையில், வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

இந்த நிலையில் தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அறிவித்து ஆட்சியா் சி. பழனி உத்தரவிட்டுள்ளாா்.

அதே நேரத்தில் கல்லூரிகளில் பல்கலைக்கழகத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தால் அந்த தோ்வுகள் நடத்தப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.