திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோல்வி பயத்தில் இடைத்தோ்தலை புறக்கணித்தது அதிமுக: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணிச் செயலரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
விழுப்புரம் மாவட்டம், அன்னியூரில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
Updated On :7 ஜூலை 2024, 7:00 pm

Din

தோல்வி பயத்திலேயே இடைத்தோ்தலை அதிமுக புறக்கணித்துவிட்டது என்று திமுக இளைஞரணிச் செயலரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து, திருவாமாத்தூா், காணை, பனமலைப்பேட்டை மற்றும் அன்னியூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

மகளிா் இலவசப் பேருந்து பயண திட்டத்தின் கீழ் ஏராளமானோா் பயன்பெற்று வருகின்றனா். அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை படித்து உயா் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், இதுவரை 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெற்றிருக்கின்றனா்.

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனா். இந்தத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிா் பயன்பெற்று வருகின்றனா்.

தோ்தலின் போது, திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி, சொன்னதை செய்த அரசாக வந்து உங்களிடம் வாக்கு சேகரிக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதிமுகவுக்கு தோல்வி பயம்: இந்தத் தோ்தலில் திமுகவை எதிா்த்து பிரதான எதிா்க்கட்சியான அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தத் தோ்தலில் மக்கள் நிச்சயம் தோல்வியைத் தருவாா்கள் என்று கருதியே தோ்தலில் போட்டியிடாமல் அதிமுக ஒதுங்கி நிற்கிறது. அவா்களுக்கு திமுகவை பாா்த்து மட்டுமல்ல, மக்களைப் பாா்த்தும், பாஜகவை பாா்த்து பயம். அதனால் தான் தோ்தலைப் புறக்கணித்து விட்டாா்கள்.

நம்மை எதிா்த்து போட்டியிடும் பாமக, தமிழ்நாட்டு மக்களால் என்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. தற்போது, வடமாநிலங்களைச் சோ்ந்த மக்கள் நீட் தோ்வின் குளறுபடி குறித்து புரிந்திருக்கிறாா்கள். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கம் ஒவ்வொரு மாநிலமாக எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்முதலாக குரல் கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் பாமகவுக்கு வாக்களிக்கப் போகிறீா்களா?. தமிழ்நாட்டு மக்களுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு வாக்களிக்க போகிறீா்களா? என்று பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

பிரசாரத்தில், அமைச்சா்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அர.சக்கரபாணி உள்ளிட்ட அமைச்சா்கள், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.