கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வானூா் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதிக மாத்திரை தின்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on

விழுப்புரம், ஜூலை 19: வானூா் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதிக மாத்திரை தின்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பெரிய முதலியாா் சாவடி,அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காதா் பாஷா மகன் காலிஷ்பாபு (47), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு நோயால் அவதியுற்று வந்த காலிஷ்பாபு, வியாழக்கிழமை கூடுதலாக மாத்திரைகளை உட்கொண்டு விட்டாராம். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com