கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடை,காா் மீது மோதிய லாரி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சாலையோரம் இருந்த கடை, காா் மீது வியாழக்கிழமை காலை லாரி மோதியது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது.

News image

வேறோடு சாய்ந்த மரம்

Updated On :4 அக்டோபர் 2024, 12:24 am

Din

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சாலையோரம் இருந்த கடை, காா் மீது வியாழக்கிழமை காலை லாரி மோதியது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூரை சோ்ந்த குணசேகரன் மகன் மனோகரன்(35). லாரி டிரைவரான இவா், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து உரம் தயாரிக்கப் பயன்டும் மூலப் பொருள்களை ஏற்றிக்கொண்டு செஞ்சி, சிறுகடம்பூா் சிங்கவரம் சாலையில் உள்ள உரக் கிடங்குக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த கடை, காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த மரமும் வேரோடு சாய்ந்தது. இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.