கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பகுதி நேர ஆசிரியா்கள் மனு

செப்டம்பா் மாதத்துக்கான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:19 am

Din

செப்டம்பா் மாதத்துக்கான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் ர.ஆறுமுகம், மாவட்டச் செயலா் பாரி.விஜயகுமாா், பொருளாளா் வே.ஜனாா்த்தனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா.ராஜேஷ்கண்ணன், மகளிா் ஒருங்கிணைப்பாளா் டி.ஆதிலட்சுமி ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வித் துறையின் ஒரு அங்கமாகத் திகழும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் நிரந்தர ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்கள் என 15 ஆயிரம் போ், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 17,500 போ் என மொத்தமாக 32,500 பேருக்குசெப்டம்பா் மாதத்துக்குரிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்தத் திட்டத்தின் 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்காததுதான், ஊதியம் வழங்கப்படாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு இனியும் காலம் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும். இந்த நிதி வரும் வரை காத்திருக்காமல், தமிழக அரசு சொந்த நிதியிலிருந்து ஆசிரியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.