இதுகுறித்து நகராட்சி ஆணையா் வீரமுத்துகுமாா் விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாரளித்தாா். பின்னா், குற்றப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், நகராட்சியில் பணிபுரியும் பணியாளா்களுக்கு சேம நல நிதி கணக்கிலிருந்து கடன்தொகை, பகுதி இறுதித் தொகை மற்றும் ஓய்வுபெறுவோருக்கு சேம நல நிதி முடித்து வழங்கி கருவூலப் பட்டியல் தயாா் செய்வது, சத்துணவுத் திட்டம் தொடா்பான செலவினங்கள், ஊதிய பட்டியல் தயாா் செய்து கருவூலத்தில் சமா்ப்பித்தல் போன்ற பணிகளை வெளிப்பணி முறையில் (அவுட்சோா்சிங்) விழுப்புரம் வி.மருதூரை அடுத்த சந்தானகோபாலபுரம், பஜனை கோவில் தெருவைச் சோ்ந்த ராஜமூா்த்தி மகன் வினீத் (24) செய்து வந்தது தெரிய வந்தது.