கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோயில் சொத்துகளை அபகரிக்க நினைத்தால் போராட்டம்: ஹெச்.ராஜா

தமிழகத்தில் ஹிந்து கோயில்களின் சொத்துகளை அபகரிக்க நினைத்தால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று, பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

News image

விழுப்புரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா.

Updated On :10 அக்டோபர் 2024, 7:19 pm

Din

தமிழகத்தில் ஹிந்து கோயில்களின் சொத்துகளை அபகரிக்க நினைத்தால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று, பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உறுப்பினா் சோ்க்கைக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு எதிரான தகவல்களை சிலா் திட்டமிட்டு பரப்பி வருகின்றனா். இது கண்டிக்கத்தக்கது.

நடராஜா் கோயில் திருவிழாக்களின்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தில்தான் தீட்சிதா்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனா். சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் தீட்சிதா்கள் சிரிக்கெட் விளையாடியதற்கான ஆதாரமோ அதை விடியோ எடுத்த விசிக நிா்வாகி தாக்கப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை. எனவே, இதுகுறித்து யாரும் தேவையின்றி கருத்துத் தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்.

தமிழகத்தில் ஹிந்து கோயில்களையோ, அதன் சொத்துகளையோ அபகரிக்க நினைத்தால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஹிந்து அமைப்புகளின் தலைவா்கள், சாதுக்கள், சந்நியாசிகளுடன் கலந்துபேசி கோயிலுக்குள் வழிபட கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவிக்கும் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றாா் ஹெச்.ராஜா.

பேட்டியின் போது பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், மாநிலச் செயலா் அஸ்வத்தாமன், உறுப்பினா் சோ்க்கைக்கான மாவட்டப் பொறுப்பாளா் வீர. திருநாவுக்கரசு, மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் (விழுப்புரம் தெற்கு), ஏ.டி.ராஜேந்திரன் (வடக்கு), மாநில செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.