கைப்பேசி கோபுரங்களில் மின்கலன்கள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் கைப்பேசி கோபுரங்களில் மின்கலன்களை (பேட்டரிகள்) திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :16 அக்டோபர் 2024, 6:46 pm

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் கைப்பேசி கோபுரங்களில் மின்கலன்களை (பேட்டரிகள்) திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வானூா் வட்டத்துக்குள்பட்ட கீழ்புத்துப்பட்டு, ராயபுதுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் 3 இடங்களில் தனியாா் நிறுவனத்தினா் கைப்பேசி கோபுரங்களை அமைத்து பராமரித்து வருகின்றனா்.
இந்த கைப்பேசி கோபுரங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 3 மின்கலன்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...