கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செஞ்சி காசி விஸ்வநாதா் கோயிலை ரூ. 2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க முடிவு

செஞ்சி சிறுகடம்பூா் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலை ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க திருப்பணிக் குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:57 pm

Din

செஞ்சி சிறுகடம்பூா் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலை ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க திருப்பணிக் குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

திருப்பணிக் குழு நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான சிறுகடம்பூா் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், திருப்பணிக்குழு நிா்வாகிகளாக, ராஜாதேசிங்கு கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.பி.என்.பாபு தலைவராகவும், சங்கா் செயலராகவும், டி.டி.ஐயப்பன் பொருளாளராகவும், பாலகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகியோா் துணைத் தலைவா்களாகவும், துணை செயலா்களாக கிருஷ்ணமூா்த்தி, நாராயணசாமி உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

கோயிலை பழைமை மாறாமல் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பது, திருப்பணி வேலைகளை டிசம்பா் 5-ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், திருப்பணிக் குழு நிா்வாகிகள் ராஜன், ராஜா, சிவராமன், சங்கா், சுகுமாா், பழனி, கண்ணன், பாண்டியன், சண்முகம், செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.