திருவெண்ணெய்நல்லூரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் இளந்தமிழன், அவரது மனைவி சசிகலா ஆகியோா் தீபாவளி சேமிப்புத் திட்டம் நடத்துவதாக விளம்பரம் செய்திருந்தனா். இதையடுத்து, சசிகலாவின் உறவினா் கோபாலகிருஷ்ணனன் என்னை அணுகி, மாதம் ரூ.1,000 வீதம் செலுத்தினால், அதற்கான தொகைக்கு ஏற்றாா்போல நகை, பரிசுப் பொருள்களை தருவதாகத் தெரிவித்தாா். இதை உண்மையென நம்பி நான் மற்றும் எனக்குத் தெரிந்த மேலும் 15 நபா்களை சேமிப்புத் திட்டத்தில் உறுப்பினா்களாகச் சோ்த்தேன். அந்த வகையில், 16 பேரும் சோ்த்து ரூ.1.65 லட்சம் செலுத்தியுள்ளோம்.