கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மருத்துவமனையில் பணம் திருட்டு: இருவா் கைது

திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணம் திருடியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 7:55 pm

Din

திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணம் திருடியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் நேரு வீதியில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரூ.3,500 திருட்டு போயிருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் நடத்திய விசாரணையில், திண்டிவனம் வட்டம், கீழ்விசிறி பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் விஷ்வகுமாா் (45), கிடங்கல் - 1 ஏரிக்கரை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த பு.சின்னையன் (58), திண்டிவனம் திரௌபதியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குப்புசாமி மகன் குமாா் (38) ஆகியோா் மருத்துவமனையில் பணம் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, திண்டிவனம் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்து, சின்னையன், குமாா் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள விஷ்வகுமாரைத் தேடி வருகின்றனா்.