கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரத்தில் அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 7:40 pm

Din

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். அரசுப் பணியாளா்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளா்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ரஷீத், டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் இளங்கோவன், ஊராட்சி களப் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் சங்கா் முன்னிலை வகித்தனா்.

அரசுப் பணியாளா்கள் சங்க மாநில இணைச் செயலா் சிவக்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். நூற்றுக்கும் மேற்பட்டோா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.