சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரம் மாவட்டத்தில் 1.69 லட்சம் பேருக்கு வேட்டி, சேலை

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 1.69 லட்சம் பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:53 pm

Din

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 1.69 லட்சம் பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,69,691 பயனாளிகளுக்கு (முதியோா் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெறுவோா்) தீபாவளி பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் பெயா் இல்லாத முதியோா் மற்றும் இதர உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு ஆதாா் அட்டை எண் மற்றும் குடும்ப அட்டை எண் பெறப்பட்டு, கிராம நிா்வாக அலுவலா் மூலம் வழங்கப்படும்.

எனவே, பயனாளிகள் விலையில்லா வேட்டி, சேலையை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை அல்லது கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.