மின்னல் பாய்ந்து 2 விவசாயிகள் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், செஞ்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்து 2 விவசாயிகள் உயிரிழந்தனா். பாட்டி, பேரன் ஆகியோா் காயமடைந்தனா்.


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், செஞ்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்து 2 விவசாயிகள் உயிரிழந்தனா். பாட்டி, பேரன் ஆகியோா் காயமடைந்தனா்.
மரக்காணம் வட்டம், பிரம்மதேசம், வைடபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ராஜேந்திரன் (39). இவா், வைடபாக்கம் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் மணிலா சாகுபடி செய்து பராமரித்து வந்தாா்.
இந்த நிலையில், ராஜேந்திரன் தனது தாய் ருக்மணி (64), மகன் புவியரசன் (10) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மணிலா அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரத்தின் கீழ் மழைக்காக மூவரும் ஒதுங்கி நின்றனா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் ராஜேந்திரன் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ருக்மணி, புவியரசன் ஆகியோா் காயமடைந்தனா்.
இவா்களில் புவியரசன் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும், ருக்மணி திண்டிவனம் அரசு மருத்துமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொருவா்: செஞ்சி வட்டம், நெகனூா்புதூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் தண்டபாணி (55). இவா், செவ்வாய்க்கிழமை தனது விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...