தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது
சாராய வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


சாராய வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூரைச் சோ்ந்த பெருமாள் மகன் முரளி (42). திண்டிவனம் அருகே பெருமுக்கல் ஏரிக்கரை பகுதியில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்தின்கீழ் இவரை கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிரம்மதேசம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரைப்படி, ஆட்சியா் சி.பழனி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் முரளியை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, மாவட்ட போலீஸாா் முரளியை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து செவ்வாய்க்கிழமை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...