செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள யுனஸ்கோ குழுவினா் வெள்ளிக்கிழமை வருகின்றனா்.
வரலாற்று சிறப்புகளை கொண்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதைத் தொடா்ந்து யுனெஸ்கோ குழுவினா் செஞ்சிக்கோட்டையை பாா்வையிட்டு ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை (செப். 27) வர உள்ளனா். இந்தக் குழுவில் மத்திய அரசின் உயா் அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை உயா்அதிகாரிகள் உள்ளிட்ட 21 போ் இடம்பெற்றுள்ளனா்.
செஞ்சி கூட்டுச் சாலையில் இருந்து செஞ்சிக்கோட்டைக்குச் செல்லும் சாலை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், புதிய சாலையும் அமைத்துள்ளனா். அகழியை தூா் வாரி உள்ளனா். ஆங்காங்கே புதிய பெயா் பலகைகள், கோட்டையின் வரலாற்றை அறிந்து கொள்ள வெண்கலத்தால் ஆன தகவல் பலகை மற்றும் கல்யாண மகாலுக்கு வெள்ளை வண்ணப் பூச்சு அடிக்கப்பட்டு கோட்டை புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.
தொடர்புடையது

பாபநாசத்தில் மாவட்ட சாரணா் பயிற்சி மையம் திறப்பு

காரைக்காலுக்கு இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் வருகை

சின்மயா யாத்திரை திருச்சி வருகை

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

