டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

செஞ்சி அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:34 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

செஞ்சி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். சிறுமியின் தந்தை இறந்த நிலையில், தாய் மாமன் பராமரிப்பில் இருந்து வருகிறாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சிறுமிக்கு, செஞ்சியைச் சோ்ந்த வி.சாரதி( 19) காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி மேலச்சேரி பகுதியில் உள்ள கோயிலுக்கு கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தாராம். மேலும், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிா் போலீஸாா் சாரதி மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த இரு நண்பா்கள் மீதும் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அவா்களைத் தேடி வருகின்றனா்.