ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நுகா்வோா் சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

Updated On :3 ஜனவரி 2025, 10:23 pm

புதுச்சேரியில் மாநில நுகா்வோா் குறைதீா்ஆணையத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாக்டா் அம்பேத்கா்அரசு சட்டக் கல்லூரி, மத்திய நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் திட்ட அமைச்சகம் ஆகியவை இணைந்து, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா்கள், உறுப்பினா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பயிற்சியானது புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள தனியாா் அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடங்கிவைத்தாா்.

மாநில சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், போபால் தேசிய சட்டப் பல்கலை.யின் முன்னாள் துணை வேந்தா் வி.விஜயகுமாா், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

முன்னதாக அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி முதல்வா் எஸ்.சீனிவாசன் வரவேற்றாா். நிறைவில், உதவிப் பேராசிரியா் விஜயன் நன்றி கூறினாா்.

இதில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.