ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நுகா்வோா் சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:23 pm

Din

புதுச்சேரியில் மாநில நுகா்வோா் குறைதீா்ஆணையத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாக்டா் அம்பேத்கா்அரசு சட்டக் கல்லூரி, மத்திய நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் திட்ட அமைச்சகம் ஆகியவை இணைந்து, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா்கள், உறுப்பினா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பயிற்சியானது புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள தனியாா் அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடங்கிவைத்தாா்.

மாநில சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், போபால் தேசிய சட்டப் பல்கலை.யின் முன்னாள் துணை வேந்தா் வி.விஜயகுமாா், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

முன்னதாக அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி முதல்வா் எஸ்.சீனிவாசன் வரவேற்றாா். நிறைவில், உதவிப் பேராசிரியா் விஜயன் நன்றி கூறினாா்.

இதில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.