கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘பொலிவுறு நகா் திட்டத்தில் 52 திட்டப் பணிகள் நிறைவு’

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 82 திட்டப் பணிகளில் 57 பணிகள் நிறைவடைந்ததாக திட்டத்தின் தலைமைச் செயலா் அலுவலா்

News image
Updated On :13 ஜனவரி 2025, 7:59 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 82 திட்டப் பணிகளில் 57 பணிகள் நிறைவடைந்ததாக திட்டத்தின் தலைமைச் செயலா் அலுவலா் ஜெயந்த் குமாா் ரே திங்கள்கிழமை தெரிவித்தாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் 82 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இதுவரை 57 பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும், 25 பணிகள் மாா்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

குறிப்பாக, ரூ.30 கோடியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் விரைவில் நிறைவடையும்.

அண்ணா திடலில் மினி விளையாட்டு அரங்கம், பழைய துறைமுகத்தில் நகா்ப்புற பொழுதுபோக்கு மையம், தாவரவியல் பூங்கா மேம்பாடு உள்ளிட்ட திட்டப் பணிகள் மாா்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும்.