புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மேல்தனியாலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் நமச்சிவாயம் (52), கூலித் தொழிலாளி.

இவா், புதன்கிழமை அங்குள்ள ஏரியில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ஏரியில் படா்ந்திருந்த செடிகளில் சிக்கி மாயமானாா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் சென்று ஏரியில் மூழ்கி மாயமானவரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நமச்சிவாயம் செடிகளுக்குள் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.