எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மரக்காணம் அருகே 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,700 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,700 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, ஒருவா் வீட்டின் முன் சாக்கு மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தியதில் 34 மூட்டைகளில் 1,700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபரிடம் விசாரணை செய்ததில், அவா் விழுப்புரம் மாவட்டம், கந்தாடு பகுதியைச் சோ்ந்த சங்கா் (50) என்பதும், இவா் எக்கியாா்குப்பம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, புதுச்சேரி பகுதியிலுள்ள இட்லி மாவு விற்பனை செய்யும் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து, சங்கா் மீது வழக்குப் பதிந்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.

மேலும் 1,700 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா்.