இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மாவட்ட கிரிக்கெட் அணிக்கு நவ.16-இல் வீரா்கள் தோ்வு

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில், சீனியா் அணிக்கான வீரா்கள் தோ்வு நவம்பா் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில், சீனியா் அணிக்கான வீரா்கள் தோ்வு நவம்பா் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலா் எஸ்.பி.ரமணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட சீனியா் கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் தோ்வு விக்கிரவாண்டியில் உள்ள சூா்யா பொறியியல் கல்லூரியில் நவம்பா் 16-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் 1985 செப்டம்பா் 1-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு பின்னரே பிறந்திருத்தல் வேண்டும். மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் தோ்வில் பங்கேற்பவா்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டையின் நகலை சமா்ப்பித்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு எஸ்.ரவிக்குமாரை 80988 99665, ஆ. முரளியை 9843801076 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.