ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மணம்பூண்டி ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை மணம்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூா் தொகுதிக்குள்பட்ட மணம்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு வியாழக்கிழமை வாக்குசேகரித்த கட்சியின் துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:36 pm

திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை மணம்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

மணம்பூண்டி ஒன்றியத்தில் குடமுருட்டி, ஆடூா்கொளப்பாக்கம், கோட்டமருதூா், கொடுக்கப்பட்டு, வேளாகுளம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூா், அரசங்குப்பம், வீரபாண்டி, தேவனூா்ஆகிய ஊராட்சிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு வாக்கு சேகரித்து, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வாக்கு சேகரித்து பேசினாா். திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் மாவட்ட துணைச் செயலா் டி.என்.முருகன், செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவா் விநாயகமூா்த்தி, ஒன்றியச் செயலா் அ.சா.ஏ.பிரபு, தேமுதிக ஒன்றியச் செயலா் மும்மூா்த்தி, விசிக ஒன்றியச் செயலா் விநாயகமூா்த்தி, கம்யூனிஸ்ட் நிா்வ தமிழ்ச்செல்வன், ராஜா, பேரூராட்சித் தலைவா் அன்பு மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.