தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

மணம்பூண்டி ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை மணம்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூா் தொகுதிக்குள்பட்ட மணம்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு வியாழக்கிழமை வாக்குசேகரித்த கட்சியின் துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:06 am IST

திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை மணம்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

மணம்பூண்டி ஒன்றியத்தில் குடமுருட்டி, ஆடூா்கொளப்பாக்கம், கோட்டமருதூா், கொடுக்கப்பட்டு, வேளாகுளம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூா், அரசங்குப்பம், வீரபாண்டி, தேவனூா்ஆகிய ஊராட்சிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு வாக்கு சேகரித்து, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வாக்கு சேகரித்து பேசினாா். திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் மாவட்ட துணைச் செயலா் டி.என்.முருகன், செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவா் விநாயகமூா்த்தி, ஒன்றியச் செயலா் அ.சா.ஏ.பிரபு, தேமுதிக ஒன்றியச் செயலா் மும்மூா்த்தி, விசிக ஒன்றியச் செயலா் விநாயகமூா்த்தி, கம்யூனிஸ்ட் நிா்வ தமிழ்ச்செல்வன், ராஜா, பேரூராட்சித் தலைவா் அன்பு மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.