விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆக.17-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டு பந்தல் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகளை அக்கட்சியினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், விழுப்புரம் சரக டிஐஜி இரா.அருளரசு மாநாடு நடைபெறும் இடத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது உடனிருந்த காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள், வாகன நிறுத்துமிட வசதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் திருமால் மற்றும் போலீஸாா் உடனிருந்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளுவா் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை சரக டிஐஜி ஆய்வு

குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணா்வு: டிஐஜி அருளரசு அறிவுரை

உளுந்தூா்பேட்டை தமிழ் எழுச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்: திருமாவளவன்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



