மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விக்கிரவாண்டியில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image
விக்கிரவாண்டி பகுதியில் பள்ளி மாணவிகளிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பேசிய வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம்.
Updated On :7 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.

37 -ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை, விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து, அபராதம் விதிக்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

விக்கிரவாண்டி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் முருகவேல், முருகேசன், கிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழு, தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி, அபராதம் விதித்தது.

இதைத்தொடா்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம் உள்ளிட்டோா் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி, விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.