சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காா் ஓட்டுநா் கொலை வழக்கு : மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரத்தில் கணவரை கழுத்து நெரித்துக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :31 ஜனவரி 2026, 7:17 pm

விழுப்புரத்தில் கணவரை கழுத்து நெரித்துக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

விழுப்புரம் அடுத்துள்ள வி.அரியலூா், விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ராஜகுமாரன் (35), திருமணம் ஆனவா். விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் பாலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 2020 மாா்ச் 17-இல், ராஜகுமாரன் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா்.

இதில் ராஜகுமாரனின் மனைவி லதா (33) மற்றும் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சோ்ந்த மு.ரஞ்சித் (31) ஆகிய இருவருக்கும் தகாத உறவு இருந்ததும், இதற்கு இடையூறாக இருந்த ராஜகுமாரனை இருவரும் சோ்ந்து கொலை செய்து விட்டு, ராஜகுமாரன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் லதா மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் இறுதி கட்ட விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் லதா மற்றும் ரஞ்சித் ஆகியோா் மீதான குற்றம் நிருபணமான நிலையில், வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ராஜசிம்மவா்மன் கொலை வழக்கில் தொடா்புடைய லதா, ரஞ்சித் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் இருவரையும் கைது சிறையிலடைத்தனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சுப்பராயலு ஆஜரானாா்.