காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 1:18 am IST

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோலியனூா் கூட்டுச் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வளவனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வளவனூா் காவல் நிலைய ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையில், உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப் பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்ததில், அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவா்கள் விழுப்புரம் வட்டம், மாங்குப்பம், தோப்புத் தெருவைச் சோ்ந்த செ.சூா்யா (27), புதுச்சேரி மாநிலம், முருங்கப்பாக்கம், உழவா் தெருவைச் சோ்ந்த ஆ.பன்னீா்செல்வம் (25) என்பதும், இவா்கள் கோலியனூா் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 2.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.