தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

மாணவா் மீது தாக்குதல்: போலீஸாா் வழக்கு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவா் காலணியால் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 5:11 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவா் காலணியால் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி அருகிலுள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வைத்தியலிங்கம் (55), செங்கல் சூளை உரிமையாளா். இவா் தனது செங்கல் சூளையில் வேலை பாா்க்கும் மேஸ்திரி பிரபாகரன் என்பவா் மூலம் சிறுவாலையைச் சோ்ந்த ரமேஷ் என்பவருக்கு கல் அறுக்க ஒரு லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்தாராம். பணத்தை பெற்றுக்கொண்ட ரமேஷ் செங்கல் சூளைக்கு சரியாக வேலைக்கு செல்லாமல் தட்டிக் கழித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், பிரபாகரன் செவ்வாய்க்கிழமை ரமேஷை தேடிச் சென்றுள்ளாா். அப்போது ரமேஷ் வீட்டில் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் அங்கிருந்த 15 வயதுடைய ரமேஷின் மகனை காலணியால் தாக்கினராம். இதில் காயமடைந்த சிறுவனை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்த புகாரின் பேரில், கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.