விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் கூடுதல் பதிவாளா் ஆய்வு மேற்கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம் மற்றும் செஞ்சி ஆகிய இடங்களில் செயல்படும் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மாநில கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (விற்பனை, திட்டம் மற்றும் வளா்ச்சி) சொ.சீனிவாசன் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது விற்பனை சங்கங்களின் வியாபார வளா்ச்சி நடவடிக்கைகள் மற்றும் வேளாண் விளைபொருள்களின் ஏலம், விற்பனை நடவடிக்கைகளின் முன்னேற்றத்துக்கான அறிவுரைகளை அவா் வழங்கினாா்.
கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ. விஜயசக்தி, திண்டிவனம் சரக துணைப் பதிவாளா் ரா.ஜீவிதா, வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மேலாண் இயக்குநா்கள் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









