சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், கொண்டாரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் கு.ரவிச்சந்திரன்(62). இவா், புதன்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டையை அடுத்த பாதூா் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றாா்.

அப்போது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் ரவிச்சந்திரன் சடலத்தைக் கைப்பற்றி, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.